Home » » மருதமுனையில் உருவாக்கப்பட்ட விமானம்!!

மருதமுனையில் உருவாக்கப்பட்ட விமானம்!!

கல்­முனை, மரு­த­மு­னையின் பிர­தான வீதி­யி­ல­மைந்­துள்ள வர்த்­தகக் கட்­டி­ட­மொன்றின் மேல் பிர­மாண்­ட­மான போயிங் ரக விமான மாதி­ரி­யொன்று அண்­மையில் நிரந்­த­ர­மாக நிறு­வப்­பட்­டுள்­ளது.
17 அடி நீள­மா­னதும் 23 அக­ல­மா­ன­து­மான இந்த விமா­னத்­தினை ஆசி­ரி­ய­ரான ஐ.எல்.எம். இஸ்­மாயில் தனது ‘வெகா சைட்’ நிறு­வ­னத்­தினால் உரு­வாக்கி கடந்த 6ஆம் திகதி வர்த்­தக கட்­டி­ட­மொன்றின் மேல் பார்­வைக்­காக நிறு­வி­யுள்ளார்.
‘ஸ்ரீலங்கா எயார்­லைன்ஸின் போயிங் பய­ணிகள் விமா­னத்தின் மாதி­ரியைப் போன்று இதனை வடி­வ­மைப்­ப­தற்கு சுமார் 200,000 ரூபா செல­வா­னது. இதனை வடி­வ­மைக்க நானும் எனது மகன்­க­ளான ஸப்ராஸ் மற்றும் மனாஸிர் ஆகியோர் சுமார் 3 மாதங்­க­ளாக பாரிய முயற்­சியில் ஈடு­பட்டோம்.
முகர்ரப் என்­பவர் புதி­தாக ஆரம்­பித்­துள்ள பயண முக வர் நிலை­யத்தின் விளம்­ப­ரத்­திற்­கா­கவே இந்த விமானம் வடிவமைக்கப்பட்டது’ என பாட­சாலை ஆசி­ரி­யரும் விமா­னத்தை வடி­வ­மைத்­த­வ­ரு­மான ஐ.எல்.எம். இஸ்­மாயில் தெரி­வித்தார்.
மரு­த­மு­னையில் தமிழ்–சிங்­கள புது­வ­ருட வியா­பாரம் களை­கட்­டி­யுள்ள நிலையில் மரு­த­மு­னையின் பிர­தான வீதியில் அமைந்­துள்ள சுமார் 75 கிலோ கிராம் நிறை­யு­டைய அலு­மி­னியம், கல்வனைஸ் இரும்புத் தகட்டினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட விமானம் பொது மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |