Advertisement

Responsive Advertisement

தொண்டமானாறு கடல்நீரேரியில் இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கின -

தொண்டமானாறு கடல்நீரேரியின் இரு மருங்கிலும் இறந்த நிலையில் லட்சக்கணக்கான மீன்கள் கரையொதுங்கியுள்ளன.
தொண்டமானாறு பிரதான பாலத்துக்கும் சந்நிதி கோயிலின் தெற்குப் பக்கத்திலுள்ள வெளிக்கள நிலையத்துக்கும் இடைப்பட்ட கடல் நீரேரிப் பகுதியின் இரு மருங்கிலும் இவை கரையொதுங்கியுள்ளன.

கரவெட்டி பிரதேச செயலர் சிவஸ்ரீ, வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் ந.அனந்தராஜ் மற்றும் படையினர் ஆகியோர் இப்பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டனர்.

இந்த மீன்கள் இறந்த கரையொதுங்கியைமைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை.

ஆனால் கடும் வரட்சியால் நீர் உவர்ப்படைந்துள்ளதால் இம் மீன்கள் இறந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இறந்த மீன்கள் திரளி வகையைச் சேர்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.

கரையொதுங்கிய மீன்களை உழவு இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தி அவற்றை புதைப்பதற்கான நடவடிக்கைகளை வல்வெட்டித்துறை நகரசபையும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையும் இணைந்து மேற்கொண்ட வருகின்றன.

இதேவேளை - யாழ். மாவட்டத்தில் மீன்களை வாங்கும் பொதுமக்கள் அவற்றை வாங்கும்போது அவதானமாகவும் விழிப்பாகவும் இருக்குமாறு கரவெட்டி பிரதேச செயலாளர் சிவஸ்ரீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏனெனில் கரையொதுங்கிய மீன்களை மீன் வியாபாரிகள் எடுத்துச் சென்றுள்ளதால் அவற்றை குளிரூட்டியில் வைத்து விட்டு விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறந்த மீன்களில் நச்சுத் தன்மை இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.






Post a Comment

0 Comments