Advertisement

Responsive Advertisement

கிணற்றில் யுவதியின் சடலம்; அதிர்ச்சி தரும் தகவலை வௌியிட்டுள்ளனர் பெற்றோர்

காணாமற்போயிருந்த குருநகர் – அடப்பன் வீதியைச் சேர்ந்த 22 வயதான ஜெரோன் கொன்ஸலீட்டா என்ற யுவதி நேற்று முன்தினம் (14) பிரதேசத்திலுள்ள  கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், யாழ். ஆயர் இல்லத்திற்கு முன்பாக அந்த யுவதியின் பெற்றோரும், உறவினர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யுவதியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கும் அவரது பெற்றோர், மரணத்திற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அத்துடன், தமது மகளின் மரணம் தொடர்பில் அதிர்ச்சி தரும் தகவலொன்றையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காணொளியில் காண்க…


Post a Comment

0 Comments