Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பைச் சேர்ந்த மூன்று பேர் வவுனியாவில் கைது! -

மட்டக்களப்பு, சந்திவெளியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உள்ளடங்கலாக 3 பேரை வவுனியாவில் வைத்து படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர்கள், கணவனும் மனைவியும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கருணா குழுவில் பணியாற்றியவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அவர்களுடன் கைது செய்யப்பட்ட அவர்களின் பிள்ளைகள் மூவர் மட்டக்களப்பில் உள்ள அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இவர்கள் மூன்று பேரும் பூசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments