Home » » மட்டு. தனியார் வங்கியில் பணம் எடுக்கச் சென்ற போது காணாமல் போன யுவதி ஹம்பாந்தோட்டையில்

மட்டு. தனியார் வங்கியில் பணம் எடுக்கச் சென்ற போது காணாமல் போன யுவதி ஹம்பாந்தோட்டையில்

செட்டிபாளையத்தில் இருந்து மட்டக்களப்பு தனியார் வங்கிக்கு வந்து பணம்பெற்றுச் சென்ற போது காணாமல் போன யுவதி ஹம்பாந்தோட்டையில் உள்ளதாக தனது குடும்பத்துக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
மட்டக்களப்புக்கு வந்து வங்கியில் பணத்தினை எடுத்துக் கொண்டு தனது ஆசைக்காதலனுடன் குறித்த யுவதி சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
புத்தாண்டுக்கு இரு தினங்களுக்கு முன்னர் குறித்த யுவதி காணாமல்போனது தொடர்பில் குறித்த யுவதியின் குடும்பத்தினர் பெரும் அச்சத்துக்குள்ளாகியிருந்தனர்.
எனினும் புத்தாண்டுக்கு மறுதினம் குறித்த யுவதி தொலைபேசியூடாக குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு தனது காதலனுடன் சென்றுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |