Home » » வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கடித்து கொன்று இறந்த நாய்

வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கடித்து கொன்று இறந்த நாய்


ஆலங்குடி: வளர்த்த எஜமானை காப்பாற்ற வீட்டுக்குள் நுழைந்த நாகப் பாம்பை கடித்து கொன்று, தானும் இறந்தது விசுவாசமான நாய். புதுக்கோட்டை மாவட் டம், ஆலங்குடியை சேர்ந்தவர் டாக்டர் முத்தையா. ஆலங்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். வீட்டில் செல்லமாக பப்பி என்ற நாயை வளர்த்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு முத்தையா வெளியூர் சென்றிருந்தார். பப்பி மட்டும் வீட்டில் இருந்தது. நேற்று முன்தினம் அவரது வீட்டுக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. அதை பார்த்த நாய் குரைத்தபடி பாம்பை விரட்டியது. 

ஆனால் பாம்பு வெளியில் செல்லவில்லை. பாம்புடன் போராடிய நாய், அதை கடித்து கொன்றது. இதில் பாம்பு கடித்ததில் நாயும் பரிதாபமாக இறந்தது. அன்றைய தினமே வீட்டுக்கு வந்த டாக்டர் முத்தையா பாம்பை கொன்று பப்பி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந் தார். பப்பியின் விசுவாசத்தை எண்ணி அழுதார். இது தெரிந்த அப்பகுதியினர் ஏராளமானோர் முத்தையாவின் வீட்டுக்கு வந்து நாயை பார்த்து சென்றனர்.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |