Home » » மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான சர்வதேச தரத்திலான விளையாட்டு விழா - 2014

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான சர்வதேச தரத்திலான விளையாட்டு விழா - 2014


மட்/பட்டிருப்பு ம.ம.வி தேசிய பாடசாலையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு விழா வெகு விமர்சையாக திரு.பொன் வன்னியசிங்கம் அதிபர் தலைமையில் எதிர்வரும் 11.03.2014 செவ்வாய்க் கிழமை பி.ப.  1.31 மணிக்கு நடைபெறுவுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கௌரவ வி.முரளிதரன் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் அவர்களும்,  கௌரவ அதிதியாக திருமதி .பி.எஸ்.எம் சாள்ஸ், அரசாங்க அதிபர், மட்டக்களப்பு அவர்களும், விசேட அதிதிகளாக திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம், வலயக்கல்விப் பணிப்பாளர், பட்டிருப்புக் கல்வி வலயம், திரு.ம.கோபாலரெத்தினம்,  பிரதேச செயலாளர், களுவாஞ்சிக்குடி, டாக்டர் சுகுணன், வைத்திய அதிகாரி, ஆதார வைத்தியசாலை, களுவாஞ்சிகுடி, அவர்களும் மற்றும் அதிதிகளாக திரு.பி.உதயகுமார், பிரதிக்கல்விப் பணிப்பாளர், ஆரம்ப பிரிவு, திரு.பி.பாலச்சந்திரன், பிரதேச கல்வி அலுவலகர், திரு.பி.வரதராஜன், உதவிக்கல்விப் பணிப்பாளர், (ஆரம்பக் கல்வி), திரு.எஸ். நாகராஜா உதவிக் கல்விக் பணிப்பாளர், (உடற்கல்வி) மற்றும் கிராமத்தலைவர்களாக திரு.அ.கந்தவேள், களுவாஞ்சிகுடி, திரு.ரி.குணபாலன், பட்டிருப்பு ஆகியோர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |