Home » » பிரித்­தா­னி­யாவில் வெள்ள அனர்த்தம் - 100,000க்கும் அதி­க­மான வீடுகள் பாதிப்பு!

பிரித்­தா­னி­யாவில் வெள்ள அனர்த்தம் - 100,000க்கும் அதி­க­மான வீடுகள் பாதிப்பு!

பிரித்­தா­னி­யா­வில் இடம்­பெற்று வரும் அடை மழை வீழ்ச்சி கார­ண­மாக 100,000க்கும் அதி­க­மான வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அந் நாட்டு மணிக்கு 90 மைல் வேகத்தில் காற்று வீசி வரு­வ­துடன் பல பிராந்­தி­யங்­களில் கடும் பனிப்­பொ­ழி இடம்பெறுகின்றது. பிரித்­தா­னிய சுற்­றுச்­சூழல் நிலையம் 150 பிராந்­தி­யங்­களில் வெள்ள அனர்த்த எச்­ச­ரிக்­கை­களையும் இங்­கி­லாந்­திலும் வேல்­ஸிலும் மட்டும் 50க்கு மேற்­பட்ட வெள்ள அனர்த்த எச்­ச­ரிக்­கைகளும் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளன.
தென்­கி­ழக்கு மற்றும் தென் மேற்கு இங்­கி­லாந்தில் 1200 வீடுகள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ள­துடன் சுமார் 7500 வீடுகளுக்கு மின்­சாரம் துண்­டிக்­கப்­பட்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்­தி­லி­ருந்து பிறி­தொரு புயல் வீசலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. கடு­மை­யான காற்று வீசி வரு­வதால் தென் புகை­யி­ரத சேவை லண்­ட­னுக்கும் சட்­விக்­கு­மி­டை­யி­லான அதிவேக புகை­யி­ரத சேவை என்­பன ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |