கிழக்கு மாகாணத்தில் கடந்த இரண்டு வருடங்களாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய பூஜித ஜயசுந்தர யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.மட்டக்களப்பு மாகாத்மா காந்தி பூங்கா சதுக்கத்தில் இடமாற்றம் பெற்றுச்செல்லும் இவருக்கான விசேட அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.
இந்த அணிவகுப்பில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா, உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments