Home » » மட்டக்களப்பு பெரியகல்லாறில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

மட்டக்களப்பு பெரியகல்லாறில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடிபொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் 4.00மணியளவில் பெரியகல்லாறு,உதயபுரம் தமிழ் வித்தியாலயத்துக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் பெரியகல்லாறு மூன்றாம் வட்டாரம்,ஊர்வீதியை சேர்ந்த ஜெ.அசாந்த்(19வயது)என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தபோது வேகக்கட்டுப்பாட்டை மீறி உதயபுரம் தமிழ் வித்தியாலத்துக்கு அருகில் இருந்த தூண் ஒன்றில் மோதியுள்ளது. இந்த நிலையில் படுகாயமடைந்தவர் உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையில் இடையில் அவர் உயிரிழந்ததாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |