முகம் முழுவதையும் மறைக்கும் வகையில் மூடும் தலைக்கவசங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டங்களை மிக இறுக்கமாகநடைமுறைப்படுத்தப் போவதாக பொலிஸ் இன்று வியாழக்கிழமை கூறியது.
கண் இமைகள் தொடக்கம் நாடிவரையுள்ள பகுதிகளை மறைக்கும் தலைக்கவசங்களுக்கு சட்டப்படி தடை உள்ளது.
முழு முகத்தையும் மூடும் தலைக் கவசங்களை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிவருவதால் இந்த சட்டம் அமுலாக்கப்படவுள்ளது என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகன கூறினார்.
0 Comments