Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்புமாவட்டத்தில்100 பழக்­கி­ரா­மங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.



விவ­சாய அமைச்சின் அனு­ச­ர­ணை­யுடன் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 100 பழக்­கி­ரா­மங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான ஆரம்ப வைபவம் சங்­கர்­பு­ரத்தில் நேற்று முன்­தினம் மாலை நடை­பெற்­றது.
மட்­டக்­க­ளப்பு மாவட்ட விவ­சாய திணைக்­களப் பணிப்­பாளர் பி.உக­நாதன் தலை­மை யில் நடை­பெற்ற இவ்­வை­ப­வ த்தில் 1000 தோடங்­கன்­றுகள் தெரிவு செய்­யப்­பட்ட பய­னா­ளி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன.
இத்­திட்­டத்தின் கீழ் வெல்­லா­வெளி, கிரான், வாகரை, செங்­க­லடி, வவு­ண­தீவு உட்­பட பல பிர­தேச செய­லகப் பிரி­வு­க­ளி லும் 100 பழக்­கி­ரா­மங்கள் அமைக்­கப்­ப­ட­வு ள்­ளன.
தோடை, மாதுளை, நாரத்தை, மா, கொய்யா உட்­பட பழ மரங்கள் செய்கை பண்­ணப்­ப­ட­வுள்ளன. குறித்த மரக்­கன்­றுகள் நடுகை செய்­யப்­பட்டு மூன்று முதல் நான்கு ஆண்­டு­களில் பழங்­களை அறு­வடை செய்ய முடி­யு­மென பணிப்­பாளர் தெரி­வித்தார்.

Post a Comment

0 Comments