கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாதபோதும்,இந்த மாநாட்டில் பங்குகொள்ள வருகை தரும்வெளிநாட்டுத்தலைவர்களைஅதுபிரத்தியேகமாகச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது.
இந்தப் பேச்சின்போது இலங்கை அரசின் மனித உரிமைமீறல்கள், இறுதிப்போர்க் குற்றங்கள் ஆகியன தொடர்பில்சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதுடன், இவைதொடர்பில் ஆவணம் ஒன்றையும் கூட்டமைப்பு அந்தத்தலைவர்களிடம் கையளிக்கவுள்ளது என்று அதன்செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமானமாவை சேனாதிராசா தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித்தலைவர்களின் கூட்டம் நேற்றுமுன்தினம்வெள்ளிக்கிழமை யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது.இதன்போது அடுத்த மாதம் கொழும்பில் இடம்பெறும்பொதுநலவாய மாநாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புபுறக்கணிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. "நாங்கள் இலங்கையில் நடக்கின்ற பொதுநலவாயமாநாட்டைத்தான் புறக்கணிக்கின்றோமே தவிரபொதுநலவாய அமைப்பை நாம் புறக்கணிக்கவில்லை''என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசாதெரிவித்தார்.
"பொதுநலவாய மாநாட்டில் கூட்டமைப்பு கலந்துகொள்ளாதபோதும், மாநாட்டுக்கு வருகை தரும் நாடுகளின்தலைவர்களை மாநாட்டுக்கு வெளியில் பிரத்தியேகமாகச்சந்தித்து இலங்கையில் இடம்பெற்றுள்ள மனித உரிமைமீறல்கள் தொடர்பான அறிக்கையைக் கையளித்துச்சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம். அத்துடன்மாநாட்டில் பங்குபற்றாத தலைவர்களுக்கு அறிக்கைஒன்றை அனுப்பி வைப்போம்'' என்று மாவை சேனாதிராசாமேலும் கூறினார்.
0 Comments