ஒடிசாவில் கனமழை: பொதுமக்கள் பாதிப்பு
பைலின் புயல் கரையைக் கடந்தபோதிலும் ஒடிஷா மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தலைநகர் புவனேஸ்வரில் பலத்த காற்றுடன் மழை பெய்துவருவதால் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பைலின் புயல் கரையைக் கடந்த கோபால்பூர் பகுதியில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின் கம்பங்களும் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது. புயல் கரையைக் கடந்த போதிலும் பலத்த காற்றுடன் கனமழை தொடரும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோர்டா பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. கோயில் விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த கோபுரம் சூறாவளிக் காற்றில் சரிந்து விழுந்துள்ளது. கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.
இதே போன்று ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் ஊருக்குள் கடல்நீர் புகுந்துள்ளது. ஒரு சில இடங்களில் மரக் கிளைகள் விழுந்து கிடக்கின்றன. விசாகப்பட்டினத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
ஒடிஷா மற்றும் ஆந்திராவில் புயல் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறிய சுமார் 8 லட்சம் பேர், மீண்டும் வீடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
0 Comments