Advertisement

Responsive Advertisement

றிஸானாவின் குடும்பத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிப்பு

றிஸானாவின் குடும்பத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிப்பு

இலங்கை இராணுவம் மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக சமூகம் ஆகியன இணைந்து றிஸானா நபீக்கின் குடும்பத்தினருக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க, மேஜர் ஜெனரல் லால் பெரேரா, கேணல் விகும் லியனகே, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி ரி.என்.எல்.கருணாரத்ன, சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி மெத கொட அபே திஸ்ஸ தேரர், வர்த்தக பொருளாதாரத துறைத் தலைவர் கலாநிதி அநுர குமார உதுமான்கே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்ற மூதூரைச் சேர்ந்த ரிசானா நபீக்கிற்கு கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments