கொழும்பில் சுற்றி வளைக்கப்பட்ட விபச்சார விடுதி: 7 பெண்கள் உட்பட 9 பேர் கைது
இலங்கையின் தலைநகர் கொழும்பின் மருதானை பொலிஸ் பிரிவில் விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு ஏழு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில், விபச்சார விடுதியை நடத்திச் சென்ற இரண்டு ஆண்களும், அதற்கு உதவியாக இருந்த ஏழு பெண்களுமே கைதாகியுள்ளனர்.
கைதான பெண்கள் 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இவர்கள் வலப்பனை, திருகோணமலை, வவுனியா, உடப்புஸ்ஸலாவ, வெல்லம்பிட்டிய, கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சந்தேகநபர்களை இன்று மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments