பொதுநலவாய நாடுகளின் தேசியக் கொடிகளைத் தாங்கிய ஊர்தி மட்டக்களப்பை வந்தடைந்தது
இலங்கையில் நவம்பர் மாதம் பொதுறலவாய மாநாடு இடமபெறவுள்ள நிலையில் பொதுநலவாய நாடுகளின் தேசியக் கொடிகளைத் தாங்கிய ஊர்தி மட்டக்களப்பை வந்தடைந்தது. ஊர்தியை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கி.மா. பணிப்பாளர் கே.தவராசா அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம் எல் எம் என் நைறூல் இன்னும் பலரும் வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு நகரில் இநநிகழ்ச்சி இடம்பெற்றது. 54 நாடுகளின் தேசியக் கொடியினைத் தாங்கி வந்த ஊர்தியானது. அந்நாடுகளின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு இறுதியாக காலிமுகத்திடலை சென்றடையவுள்ளது. இவ் ஊர்தியானது கடந்த இரண்டாம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments