Home » » புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேர் யாழ்ப்பாண சிறையிலிருந்து விடுதலை

புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேர் யாழ்ப்பாண சிறையிலிருந்து விடுதலை

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 19 பேரையும் விடுவித்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 19 பேரை கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இம் மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |