விபத்தில் உயிரிழந்த தாயின், இதய வால்வுகளை, தானமாக வழங்கி, பிறரின் பாராட்டைப் பெற்றுள்ளான், 11 வயது சிறுவன் விஷ்ணு.கேரள மாநில தலைநகர், திருவனந்தபுரத்தில் வசிப்பவர் ராதிகா. அரசு ஊழியரான இவர், சில நாட்களுக்கு முன், தன், 11 வயது மகன் விஷ்ணுவுடன், ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே வந்த ஆட்டோ, ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே, ராதிகா இறந்தார்.சிறு காயங்களுடன், சிறுவன் உயிர் தப்பினான். ராதிகாவின் கணவர், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், தாயுடன் வசித்து வந்த சிறுவன், விபத்திற்கு பின், அனாதையாகி விட்டான்.எனினும், தன் தாயின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க, அச்சிறுவன் முன் வந்தான்.
0 Comments