ராஜபக்ஷ அரசுக்கு ஒரு சுவரெழுத்து - எச்சரிக்கை : வீரமணி அறிக்கை
இலங்கையில் வட மாகாணத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கையில் வடக்கு மாகாண, ஈழத் தமிழர்கள் வாழும் பகுதியில், நேற்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தான் மொத்தம் உள்ள 34 இடங்களில் 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். வரவேற்க வேண்டிய ஆறுதல் செய்தி இது!
ராஜபக்ச அரசின் அடக்குமுறை, ஒடுக்கு முறை, அச்சுறுத்தல்களையெல்லாம் தாண்டி, ஈழத் தமிழர்கள் தங்களது உணர்வைப் பதிவு செய்துள்ளனர்!
இது சிங்கள அரசுக்கு - ராஜபக்ச அரசுக்கு ஒரு சுவரெழுத்து - எச்சரிக்கை.
முன்பு, ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமையில் பெற்ற வெற்றிகளின் விளைவுகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பல புதிய சட்ட ஏவுகணைகளை ஏவி விட்டதுபோல, இந்த வெற்றிகளையும் அலட்சியப்படுத்திவிட ராஜபக்ச அரசு முயற்சிக்கக்கூடும்.
எனவே உலகத் தமிழர் உரிமைக் காவலர்கள் இதில் கூர்மையான கவனத்தைச் செலுத்துவோம்!
0 comments: