தமிழ் கூட்டமைப்பு 100மூ வெற்றி! விக்னேஷ்வரன் முதல்வராகிறார்!
25 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வராக விக்னேஷ்வரன் பதவியேற்க உள்ளார். தேர்தல் முடிவு குறித்து தமிழர் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறுகையில், வடகிழக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை ஏற்படுத்த உறுதி கொண்டுள்ளோம்.தமிழர்கள் சுய மரியாதையுடன் வாழ ஏற்பாடு செய்யப்படும். நிரந்தர சமாதானம் காண அரசியல் தீர்வு அவசியம். நாட்டைப் பிரிக்காமல் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.
இலங்கையில், தமிழர்கள் அதிகம் வாழும், வடக்கு மாகாணத்தில், 25 ஆண்டுகளுக்குப் பின், நேற்று நடைபெற்ற, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில், 60 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. ஓட்டுப்பதிவில், மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அதேநேரத்தில், “தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஓட்டளிக்கக் கூடாது’ என, இலங்கை ராணுவத்தினர் மிரட்டியதாக, பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
0 comments: