10 வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கு கிடைத்த வெற்றி

Monday, September 9, 2024

 


இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

219 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இன்றைய 4ஆம் நாளில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அந்தவகையில், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க தனது இரண்டாவது சதத்தை பெற்றுக்கொண்டார்.

பெத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்காமல் 127 ஓட்டங்களையும், எஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி தனது முதலாவது இன்னிங்ஸிற்காக களம் இறங்கிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 325 ஓட்டங்களை பெற்றது.

மேலும் போட்டியில் தமது 2 ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதற்கமைய இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 219 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இன்றைய 4ஆம் நாளில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி இறுதியாக 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்துடன் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்ததன் பின்னர் தற்போது 10 வருடங்களுக்கு பின்னர் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

READ MORE | comments

எதிர்வரும் 20ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை*


 *எதிர்வரும் 20ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை* 

ஜனாதிபதி தேர்தல் காரணமாக எதிர்வரும் 20ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் செப்டம்பர் 18 முதல் 24 வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌐 *💯நம்பகமான செய்திகளை நாள்தோறும் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்அப் குழுவில்* *இணைந்திடுங்கள்📱** 

 *https://chat.whatsapp.com/FwzoXFD795mLL3aMeFM7GA* 

*👉ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்💯*


📱 *நீங்களும் இக்குழுவில் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளலாம்* 


*🌐 *குறைந்த கட்டணத்தில் உங்கள் பெறுமதியான விளம்பரங்களை எமது whatsapp குழுமங்களில் பகிர்ந்து கொள்ள கீழுள்ள லிங்கை கிளிக்* *செய்து எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்* 


 *https://wa.me/+94773418460* 


 *https://wa.me/+94760346948* 


📲

 *எமது Facebook பக்கத்தை Like செய்வதனூடாகவும் FB பக்கத்தை following* *செய்வதனூடாகவும் செய்திகளைப் பெற்றுக் கொள்ளலாம். Link* 👇

 *https://www.facebook.com/profile.php?id=100063202301521&mibextid=hIlR13


🙏

 *_உங்கள் ஆதரவினை Share பண்ணி எங்களுக்குத்தாருங்கள்_*

READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தில் தன்மன் செட்டி குடி மக்களின் சித்திரத்தேரோட்டம்

Sunday, August 18, 2024

 மட்டக்களப்பு  குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஒன்பதாம் நாள் திருவிழா தேர் திருவிழா இன்று ( 18)  வெகு  விமர்சையாக இடம் பெற்றது .

இம் மாதம்  பத்தாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய பெருவிழாவில் நேற்று பதினெட்டாம் திகதி திருவிழாவும் இன்றைய தினம் ( 18 )  காலை 9:30 மணி அளவில் தேர் திருவிழா விசேட கிரியைகள் ஆரம்பமாகி வசந்த மண்டப பூஜை இடம்பெற்று சுவாமி உள் வீதி வலம் வருதல் நிகழ்வு இடம் பெற்றதை தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதற்காக முத்து இரதத்தில் வள்ளி தெய்வானை சமேதரராய் முருகப்பெருமான் எழுந்தருளி மக்களுக்கு அருள்பாலித்தார். 

நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டமை  குறிப்பிடத்தக்கது இக்கிரியை நிகழ்வுகள் யாவும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நவரத்தின முரசொலி மாறன் குருக்கள் தலைமையிலான குழுவினரால்  குறிப்பிடத்தக்கது.

 அரோகரா கோஷங்கள் முழங்க வேத பாராயணங்கள் ஒலிக்க வழி செய்வானை சமேதரராக முருக பெருமான் மக்களுக்கு அருள் பாலித்தார். 

தொடர்ந்து பத்து நாட்கள் இடம்பெறும் பெருவிழாவில் நாளைய தினம் ( 19)  ஆவணி பூரணையில் சமுத்திர தீர்த்த  உற்சவம் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது










READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்திற்கு சாணக்கியன் M.P விஜயம் .

Thursday, August 1, 2024

 மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்திற்கு  சாணக்கியன் M.P விஜயம் .







அதன் போது மாகாண மட்டத்தில் பூப்பந்தாட்டத்தில்  வெள்ளிப்பதக்கத்தை பெற்ற 18 வயது பிரிவிற்குட்பட்ட  வீராங்கனைகளை கௌரவித்ததோடு ,பாடசாலையில் உள்ளக விளையாட்டரங்கிற்கான மின்குமிழ்கள்  பொருத்தப்பட்டு ,  மின்னொளி உள்ளக விளையாட்டரங்காக இரவிலும் பயிற்சி பெறும் அளவிற்கு  மாற்றப்பட்டதை  பார்வையிட்டார். இதற்கான நிதியினை தன்னுடைய  2024ம் ஆண்டுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பகிர்ந்தளிக்கப்பட்டது.



READ MORE | comments

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாளை சுகயீன விடுமுறையில்

Tuesday, June 25, 2024

 


ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வைக் கோரி, நாளை (26) சுகயீன விடுமுறையை அறிவித்து கொழும்புக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இதன்படி நாளை முற்பகல் 11.00 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆசிரியர் – அதிபர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் – முதன்மை ஊதிய வேறுபாடுகளைக் களைய சுபோதானி கமிட்டி அறிக்கையின் பரிந்துரைகளில் மூன்றில் ஒரு பங்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கைப் பெறுவதற்கான தொழில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

READ MORE | comments

7 #மணித்தியாலங்கள் நீடித்த போராட்டம். ஸ்தம்பித்த #கல்முனை நகர இயல்பு நிலை.

Monday, June 24, 2024

 




கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெறும் நிர்வாக அடக்குமுறைகளை கண்டித்தும் அதற்கான உரிய தீர்வு கோரியும் தொடர்ச்சியாக 92 நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயங்களுக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி இன்று திங்கட்கிழமை (24) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதுடன் பதற்ற நிலை தொடர்ந்தது.

அத்துடன், பிரதேச செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய நிலையில் அதிகாரிகளை உள்நுழைய விடாமல் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மட்டக்களப்பு - கல்முனை வீதி தடைப்பட்டுள்ளதால் வாகனங்களை மாற்று வீதிகளில் அனுப்புவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதே வேளை 7 மணித்தியாலங்களாக கல்முனை நகர் போராட்டக்காரர் வசம் இருந்த நிலையில் கல்முனையில் வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

காலை 8.00 மணிமுதல் பி.ப 2 மணி வரை கல்முனை மாநகரம் ஸ்தம்பித்திருந்ததுடன், நகரில் இருந்து அனைத்து பொது போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தது. மருத்துவ சேவை வாகனங்கள் மாத்திரம் மக்களால் அனுமதிக்கப்பட்டிருந்தன.

அத்துடன், தமது நியாயமான கோரிக்கைக்கு பதில் என்ன? என பல கோஷத்துடன் வீதியில் அமர்ந்தும் போராட்டம் செய்தனர்.பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் பொலிஸாரின் மத்தியஸ்த்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கேட்டுக்கொண்டதற்கிணங்க சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எட்டுப் பேர் மாவட்ட செயலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர்.

அதுவரை வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வழமை போன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக சுழச்சிமுறை போராட்டம் தொடர்கிறமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வழமைக்கு மாறாக இன்று பாரிய விமானம் ஒன்று பெரும் இரைச்சலுடன் ஆகாயத்தில் வட்டமடித்த வண்ணம் இருந்ததையும் காண முடிந்தது.

READ MORE | comments

CAMBRIDGE CLIMATE QUEST” சுயக் கற்கை நெறியை இலவசமாக கற்கும் வாய்ப்பு


 இலங்கையின் கல்வித் துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், 8ஆம் தரம் முதல் 12ஆம் தரம் வரை கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு 3 மொழிகளிலும் “Cambridge Climate Quest” சுயக் கற்கை நெறியை மூன்று மொழிகளிலும் கற்பதற்கான வாய்ப்பு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மேலும், பிராந்திய உயர்கல்வி தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, அவுஸ்திரேலியாவின் பிலின்டர்ஸ் பல்கலைக்கழகம் (Flinders University) இலங்கையில் தனது பல்கலைக்கழக வளாகத்தை ஆரம்பித்து பல்வேறு துறைகளில் இளமாணி, முதுமாணி பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்விப் பிரவேசத்திற்கான வாய்ப்புகளை வழங்க உள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

READ MORE | comments

புதிய வீட்டுத்திட்டங்களை எதிர்வரும் வருடங்களில் ஆரம்பிக்க திட்டம்

 


மட்டக்களப்பு மாவட்டத்தின் வீடற்ற மக்களுக்காக பல புதிய வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்து வைப்பது உட்பட அவர்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக பல புதிய திட்டங்களை எதிர்வரும் வருடங்களில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை 2500 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இந்த வாரம் முதல் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் நேற்று (23) நடைபெற்ற க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரம் கற்று வெளியேறிய மாணவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்,யுவதிகள் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இளைஞர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி அளித்த பதில்களும் வருமாறு,

கேள்வி:நிரந்தர வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத ஏராளமானோர் இப்பகுதியில் வசிக்கின்றனர். அவர்களுக்கான வீட்டுவசதி மற்றும் மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் உள்ளதா?

பதில்:இந்த ஆண்டின் இறுதிக் காலாண்டு தேர்தல் காலமாகும். எனவே, இவ்வருடம் அந்தப் பணிகளை ஆரம்பிக்க முடியாத போதிலும், அடுத்த சில வருடங்களில் பல புதிய வீட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

பல்கலைக்கழகத்தை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு

 


பல்கலைகழகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள், கல்லூரிகள், கல்வி காரியாலயங்கள், மாணவர் சமூகம் மற்றும் பௌதீக வளங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கல்வி அமைச்சின் செயலாளரினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

READ MORE | comments

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம்

Tuesday, June 4, 2024

 


அதன்படி இன்று (04) நள்ளிரவு முதல் இந்த புதிய விலை திருத்தம் அமுல்படுத்தப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.150 குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 3,790 ரூபாய்.

5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.60 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,525 ஆக உள்ளது.

2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 712 ரூபாவாகும்.

READ MORE | comments

 


ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று(03) பிற்பகல் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, கண்டி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷவிற்கும் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.

பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம தலையிட்டு சம்பவத்தை சமரசம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், கூட்டம் முடிந்து வௌியேறும் போது மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குணதிலக்க ராஜபக்ஷவுக்கும் இடையில் மாடிப்படியில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ மாடிப்படியில் இருந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் படுகாயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குணதிலக்க ராஜபக்ஷவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கையில்;

குணதிலக ராஜபக்ஷவுடன் வாக்குவாதம் செய்ததாகவும், எனினும், அவரை தள்ள முயற்சிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை பார்த்த பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம, அவ்விடத்திற்கு வந்து பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவை அழைத்துச் செல்ல முற்பட்ட போது அவர் தவறி விழுந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

READ MORE | comments

S.மகேந்திரகுமார் சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளாராக இன்று பதவியேற்பு

Monday, June 3, 2024

 S.மகேந்திரகுமார் சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளாராக இன்று பதவியேற்பு







READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

10 வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கு கிடைத்த வெற்றி

  இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது....

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |