Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இன்றைய சமூகத்திற்கு* அத்தியாவசியமான இளம் தலைவிகளை உருவாக்கும் ஆற்றல் இலங்கை பெண் வழிகாட்டிச் சங்கத்திற்கு உள்ளது - ஹரினி அமரசூரிய

 *


இன்றைய சமூகத்திற்கு* அத்தியாவசியமான இளம் தலைவிகளை உருவாக்கும் ஆற்றல் இலங்கை பெண் வழிகாட்டிச் சங்கத்திற்கு உள்ளது - ஹரினி அமரசூரிய

இன்றைய சமூகத்தில் பெண்கள் வகிக்கின்ற முக்கியப் பங்கு மற்றும் அவர்களின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் நோக்குடன், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய , பெண் தலைமைத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தியதோடு, அதனை நிறைவேற்றும் திறன் இலங்கை பெண் வழிகாட்டிச் சங்கத்திடம் உள்ளதென தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய பெண்களுக்கான தன்னார்வ அமைப்பின் ஓர் அங்கமான இலங்கை பெண் வழிகாட்டிச் சங்கத்தால், வெள்ளிக்கிழமை (01) அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட 'ஜனாதிபதி பெண் வழிகாட்டி விருது' வழங்கும் விழாவில் உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இவ்விழாவில், ஒரு பெண் வழிகாட்டி பெறக்கூடிய மிக உயர்ந்த கௌரவ விருதான 'ஜனாதிபதி பெண் வழிகாட்டி விருது' 306 பெண் வழிகாட்டிகளுக்கு வழங்கப்பட்டது.

அதேவேளை, 'பிரதமர் பெண் வழிகாட்டி விருது' 18 பேருக்கு வழங்கப்பட்டது.

விருதளிப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மேலும் கூறியதாவது:

"இலங்கை பெண் வழிகாட்டிச் சங்கத்தால் வழங்கப்படும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

1917 ஆம் ஆண்டில் கண்டியில் உள்ள மகளிர் உயர்தரப் பாடசாலையில் தொடங்கிய இந்த இயக்கம், இப்போது நாடு முழுவதும் பரவியுள்ளது.

இதன் மூலம், 8 வயது முதலே பெண் குழந்தைகள் நாட்டிற்குத் தலைமை தாங்குவதற்குத் தேவையான வலுவான மற்றும் முழுமையான ஆளுமையை வளர்த்து, பல்வேறு சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல்மிக்க சிறுமிகளாக உருவாவதற்கு வாய்ப்புக் கிடைக்கிறது.

நமது நாட்டிற்கு இதுபோன்ற வலிமையான எதிர்கால தலைமுறையே தேவை. இந்த விருது பெறுபவர்களின் அர்ப்பணிப்பும், அவர்களின் வெற்றிக்குப் பின்னால் இருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், வழிகாட்டிகள் மற்றும் வழிகாட்டித் தலைவர்களின் ஆதரவும் மிகவும் பாராட்டத்தக்கது.

நான் உங்களிடம் பிரதமர் என்ற முறையில் மட்டுமல்லாது, என் சிறுவயதில் ஒரு 'சிறிய சிநேகிதியாக' (little friend) இந்த இயக்கத்தில் இணைந்த ஒருவராகவும் பேசுகிறேன். அப்போது நான் பெற்ற அனுபவங்கள், எனது பயணம் முழுவதும் எனக்கு வழிகாட்டியாக இருந்துள்ளன.

இந்த இயக்கம் பெண்களுக்குத் தன்னம்பிக்கையையும், தலைமைத்துவப் பண்புகளையும் அளித்து, ஒவ்வொரு பெண்ணும் நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பதற்கான சூழலை உருவாக்குகிறது. இதுபோன்ற இயக்கங்களிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது இதுதான்.


அதேபோன்று, எமது அரசாங்கம் செயல்படுத்தி வரும் கல்விச் சீர்திருத்தங்களின் மூலமும், இதுபோன்ற பிள்ளைகளை உருவாக்குவதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்."


இந்த நிகழ்வில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசூரிய, பெண் வழிகாட்டிச் சங்கத்தின் தலைவர் சொர்ணிகா பிட்டிகல, தலைமை ஆணையாளர் கலாநிதி குஷாந்த ஹேரத், சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் முன்னாள் ஆணையாளர்கள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், பெண் வழிகாட்டிச் சங்கத்தின் பல்வேறு மட்ட ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட ஆணையாளர்கள், பெண் வழிகாட்டித் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் விருது பெற்றவர்கள் கலந்துகொண்டனர்.

🌐 *💯நம்பகமான செய்திகளை நாள்தோறும் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்அப் குழுவில்* *இணைந்திடுங்கள்📱** 

 *https://chat.whatsapp.com/FwzoXFD795mLL3aMeFM7GA* 

*👉ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்💯*


📱 *நீங்களும் இக்குழுவில் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளலாம்* 


*🌐 *குறைந்த கட்டணத்தில் உங்கள் பெறுமதியான விளம்பரங்களை எமது whatsapp குழுமங்களில் பகிர்ந்து கொள்ள கீழுள்ள லிங்கை கிளிக்* *செய்து எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்* 


 *https://wa.me/+94773418460* 


📲

 *எமது Facebook பக்கத்தை Like செய்வதனூடாகவும் FB பக்கத்தை following* *செய்வதனூடாகவும் செய்திகளைப் பெற்றுக் கொள்ளலாம். Link* 👇

 *https://www.facebook.com/profile.php?id=100063202301521&mibextid=hIlR13


🙏

 *_உங்கள் ஆதரவினை Share பண்ணி எங்களுக்குத்தாருங்கள்_*

Post a Comment

0 Comments