Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாழைக்குளப் பகுதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாகப் இன்று பிரகடனம் ! !

 


மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாழைக்குளப் பகுதி  சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாகப் இன்று பிரகடனம் ! !


மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாலைக்குள சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாக  பிரகடனம்.
மட்டக்களப்பு நிருபர் சோபிதன்

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை.உத்தியோகபூர்வமாக  அங்குரார்ப்பணம் செய்தல் நிகழ்வு  இன்று வெள்ளிக்கிழமை (05.04.2024) குருக்கள்மடம் ஐயனார் ஆலய முன்றலில்  நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி முரளிதரன் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் மற்றும்  பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது குருக்கள்மடம் ஏத்தாழைக்குளத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உடனடி கள விஜயத்தினை மேற்கொண்டு , ஏத்தாலைக்குளம் சார்ந்த சூழலை பார்வையிட்டனர்.

 










உத்தியோக பூர்வமாக மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாழைக்குள ஈரநிலப்பாதுகாப்பு வலயமாக வழங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதானி , மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அம்மணியிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது




Post a Comment

0 Comments