Home » » DAT கொடுப்பனவு நிறுத்தம் – வைத்தியர்கள் நாளை முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு

DAT கொடுப்பனவு நிறுத்தம் – வைத்தியர்கள் நாளை முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு

 


நாளை (24) முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனவரி மாதம் முதல் DAT கொடுப்பனவை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 35,000 கொடுப்பனவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன கையொப்பமிட்ட அறிவிப்பு இன்று (23) வெளியிடப்பட்டுள்ளது.

அதற்குத் தேவையான ஏற்பாடுகளை திறைசேரி வழங்கவில்லை என குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |