Home » » சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் கலப்பு கரப்பந்தாட்ட போட்டியில் சம்பியனானது குருக்கள்மடம் இளைஞர் கழகம்.

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் கலப்பு கரப்பந்தாட்ட போட்டியில் சம்பியனானது குருக்கள்மடம் இளைஞர் கழகம்.

 





சர்வதேச #இளைஞர் தினத்தை முன்னிட்டு ஆண் பெண்கள் இணைந்த #கலப்பு #கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்றைய தினம் குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலய  விளையாட்டு மைதான கரப்பந்தாட்ட திடலில் இடம்பெற்றது 


இப்போட்டியில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப்பிரிவினை பிரதிநிதித்துவப்படுத்திய தெரிவு செய்யப்பட்ட 03 அணிகளும் , ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவை பிரதிநிதித்துவப்படுத்திய தெரிவுசெய்யப்பட்ட  3 அணிகளும் கலந்துகொண்டன.


இப்போட்டியில் கலந்துகொண்ட 06 அணிகளுள் இறுதிப்போட்டிக்கு குருக்கள்மடம் இளைஞர் கழக அணியும் களுதாவளை இளைஞர் கழக அணியும் தெரிவாகின. இறுதிப்போட்டியில்  2 க்கு 1 எனும் கணக்கில் குருக்கள்மடம் இளைஞர் கழகம் சுவீகரித்தது.


இப்போட்டிக்கு இளைஞர் சேவைகள் அதிகாரிகள் , பிரதேச செயலக உறுப்பினர்கள் ,வீரர்கள் , பார்வையாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர் 


இதன் போது வெற்றியீட்டிய மற்றும் பங்குகொண்ட அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


சோபிதன்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |