Home » » ஆசிரியர்,அதிபர்களின் அடுத்த கட்ட சம்பள அதிகரிப்பை வழங்க தேவையான 4,200 கோடி ரூபா நிதியை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்க கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி

ஆசிரியர்,அதிபர்களின் அடுத்த கட்ட சம்பள அதிகரிப்பை வழங்க தேவையான 4,200 கோடி ரூபா நிதியை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்க கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி

 இன்று (14.08.2023)கல்வி அமைச்சருடன் ஆசிரியர்,அதிபர் தொழில் சங்க கூட்டணி சுமார் ஒன்றரை மணி நேரம் நடத்திய கலந்துரையாடலில் ஆராயப்பட்ட விடயங்களும் தீர்மானங்களும் 




1.ஆசிரியர்,அதிபர்களின் அடுத்த கட்ட சம்பள அதிகரிப்பை வழங்க தேவையான 4,200 கோடி ரூபா நிதியை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்க கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி 


2.2022.10.23 க்கு பின்னர் இதவடிவம் முடிக்காமையால் பதவி உயர்வு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்க அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி பெற்று 2023.10.23 வரை ஒருவருட காலத்துக்கு  வழங்கப்பட்டுள்ள சலுகையை நீடித்தல் 


3.இரண்டாம் மொழி சித்தி தொடர்பாக தீர்வொன்றை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்தல் 


4.51 வருட கால பழமையான 1981/13 ஆம் இலக்கச் சுற்றறிக்கையை இற்றைப்படுத்த நடவடிக்கை எடுத்தல் 


5.மாணவர் காப்புறுதி நடைமுறை அடுத்த வரவு திட்டத்தின் மூலம் தொடரப்படும்

 

6.தேசிய பாடசாலைகளில் இருந்து இடமாற்றப்பட்டு செல்லாதிருக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அடுத்த வாரம் புதிய சுற்றறிக்கை வெளியிடப்படும் 


7.பாடசாலைகளில் மாணவர்களிடம்,பெற்றோர்களிடம் நிதி அறவிடும் செயல்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் 


8..ஆசிரியர்கள் பெற்றுள்ள கடனுக்கு அதிகரித்த வட்டியைத் தொடர்ந்து அறவிடுவதை நிறுத்த மத்திய வங்கி ஆளுனருடன் கலந்து பேசி தீர்வு காணப்படும்.


9. 40,000 க்கு மேல் ஆசிரியர் வெற்றிடம் இருப்பதால் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்படுவதாக கல்வி அமைச்சரிடம் தொழில் சங்கங்கள் சுட்டிக்காட்டின .இதற்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.


10.2009 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற அதிபர்களின் பதவி உயர்வு தடைதாண்டல் போன்ற பரீட்சை விடயங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது அவர்களுக்கு சலுகை வழங்கி இதற்கு தீர்வு காணவேண்டும் 


11.ஆசிரியர்,அதிபர்களுக்கு நிலுவைக்கு வரி விதிப்பதை நிறுத்தவேண்டும் 


12.பரீட்சை கொடுப்பனவுகள் உடன் வழங்கப்பட வேண்டும் 


13,.ஓய்வுபெறும்,வெளிநாடு செல்லும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப மாகாண சபை மட்டத்தில் நியமனங்கள்  வழங்க அனுமதி வழங்கப்பட்ட உள்ளது.


இவ்வாறு பல விடையங்கள் கலந்துரையாடி கல்வி அமைச்சரின் சம்மதம் பெறப்பட்டது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |