Advertisement

Responsive Advertisement

பாக்குநீரிணையினை நீந்திக்கடந்தார் மட்டு மண்ணின் மைந்தன்

 


இன்றைய தினம் பாக்குநீரிணையினை கடந்து மட்டக்களப்பு  மண்ணிற்கு பெருமைசேர்த்த T . மதுஷிகன் அவர்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருவாளர் கோவிந்தன் கருணாகரம் உள்ளிட்ட குழுவினர் தலைமன்னாரில் வரவேற்று பாராட்டினர்.


மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லுரியின் பழைய மாணவரான இவர் இச் சாதனையினை புனித மிக்கேல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவில் நிகழ்த்தியிருப்பது சிறப்பம்சமாகும்.


20 வயதுடைய ஜனாதிபதி சாரணர் விருது பெற்ற மதுஷிகன்  இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான 30 கிலோ மீற்றர் தூரத்தை இன்று அதிகாலை நீந்தத் தொடங்கி இன்று பிற்பகல் 2 மணியளவில் நாட்டின் தலைமன்னாரை வந்தடைந்தார். 


இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க வேண்டும் என்பது  நீச்சல் வீரர்கள் பலரினதும் அபிலாஷையாக இருந்து வருகின்றது. ஆனால் இதை நீந்திக் கடக்கின்றமை என்பது மிகப் பெரிய சவால் ஆகும். 


ஏனெனில் இந்நீரிணை பூராவும் கடல் பாம்புகள், ஆபத்தான கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. இதையும் தாண்டி மட்டக்களப்பை சேர்ந்த இந்த மாணவன் சாதித்திருப்பது பெரிய விடயமே காரணம் இத் தூரத்தை நீந்திக்கடக்க முயன்ற பலர் தோல்வியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது இச் சவால்களை முறியடித்து கிட்டத்தட்ட 12 மணித்தியாலங்களுக்கு மேல் தொடர்ந்தேர்ச்சியாக நீந்தி இலக்கை அடைந்துள்ள மதுசிகனை பாராட்டியே ஆக வேண்டும்


மட்டக்களப்பிலும் இவ்வாறான திறமையாளர்கள் உள்ளதை நினைத்து பெருமை கொள்கிறோம்.

Post a Comment

0 Comments