Home » » பரீட்சையின்றி அனைத்து சாதாரண தர மாணவர்களையும் உயர்தரத்துக்கு அனுப்ப கோரிக்கை

பரீட்சையின்றி அனைத்து சாதாரண தர மாணவர்களையும் உயர்தரத்துக்கு அனுப்ப கோரிக்கை


 

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இன்று பாராளுமன்றில் உரையாற்றிய அமைச்சர், க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பெண் வழங்குவதில் உருவாகியுள்ள தாமதம் காரணமாக தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 600,000 மாணவர்களால் க.பொ.த உயர்தரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்துவது தொடர்பில் பரிசீலிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த அழகப்பெரும, அதற்குப் பதிலாக அனைத்து மாணவர்களும் உயர் தரக் கல்வியை ஆரம்பிப்பதற்கு தகுதியுடையவர்கள் என பரீட்சை திணைக்களத்தின் சான்றிதழை வழங்குமாறும் அறிவுறுத்தினார்.


இந்த நடவடிக்கையானது, க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை மீண்டும் டிசம்பரில் நடத்துவதற்கு அதிகாரிகளுக்கு இடமளிக்கும் என்றும், மாணவர்களுக்கு அநீதியை ஏற்படுத்தாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |