Home » » தேசிய மட்டத்தில் மருத்துவ துறையில் முதலிடம் பிடித்த மட்டக்களப்பு மாணவன்

தேசிய மட்டத்தில் மருத்துவ துறையில் முதலிடம் பிடித்த மட்டக்களப்பு மாணவன்

 


தேசிய மட்டத்தில் மருத்துவ துறையில் முதலிடம் பிடித்த மட்டக்களப்பு மாணவன்

க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மருத்துவபீடம் தமிழ் மொழி மூலத்தில் நாடளாவிய ரீதியில் முதலாமிடம் மட்டக்களப்பு மாவட்டம்.

மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ் தேசிய மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இம் மாணவன் மட்/ புனித மிக்கேல் கல்லூரியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

 (சுதா)

2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த  உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று (28) திகதி மாலை வெளியான நிலையில் இம்முறை 1,71,497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் (Biological Science) தமிழ் மொழியில் தேசிய ரீதியில் மட்டக்களப்பு கல்லடியில் வசித்துவரும் தமிழ்வண்ணன் துவாரகேஸ் எனும் மாணவன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.


உயிரியல் விஞ்ஞானத்தில் (Biological Science) தமிழ் மொழியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற துவாரகேஸ் வைத்தியர்களான திரு.திருமதி தமிழ்வண்ணன் தம்பதியினரின் மூத்த மகனானகவும்,  மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட புனித மிக்கல் கல்லூரியின் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |