Advertisement

Responsive Advertisement

மே 9 உள்ளிட்ட பல வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்கள் கைது!

 


நாட்டில் கடந்த மே 9 இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்ட மேலும் பல வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பொலிஸ் ஊடகப்பிரிவு இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, பாதுகாப்பு தரப்பினர் மீது தாக்குதல் மேற்கொண்டமை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை போன்ற அரச கட்டிடங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துகளுக்கு தேசம் விளைவித்தமை,

போராட்டங்களின் போது மக்கள் பிரதிநிதிகளின் உடைமைகளுக்கு சேதம் விளைத்தமை மற்றும் சொத்துகளுக்கு தீ முட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 35 – 73 வயதுகளுக்கிடைப்பட்ட, சிலாபம், பாணந்துறை, வீரம்புகெதர, ஜா-எல, கொலொன்ன மற்றும் இரத்மலானை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments