Home » » இறுதி இலக்கத்தின் படி எரிபொருள். நாளைய தினம் எரிபொருளை பெற்றுக்கொள்ள கூடிய வாகனங்களின் இறுதி இலக்கங்கள் தொடர்பான முழுமையான விபரம்.

இறுதி இலக்கத்தின் படி எரிபொருள். நாளைய தினம் எரிபொருளை பெற்றுக்கொள்ள கூடிய வாகனங்களின் இறுதி இலக்கங்கள் தொடர்பான முழுமையான விபரம்.

 


21-07-2022.

வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் திட்டத்தை வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு திருத்தம் செய்திருந்தது.

இதற்கமைய 6, 7, 8, 9 ஆகிய இலக்கங்களை இறுதி இலக்கமாகக் கொண்ட வாகனங்களுக்கு நாளைய தினம் எரிபொருள் விநியோகிக்கப்படும்.


*எரிபொருள் வழங்கலில் வரையறை,

உந்துருளிக்கு 1,500 ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிக்கு 2,000 ரூபாவுக்கும், ஏனைய வாகனங்களுக்கு ஏழாயிரம் ரூபாவுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட உள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை QR குறியீட்டு முறைமையானது, எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அமுலாக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |