Home » » இரத்து செய்யப்படும் கடன்கள்! நாட்டின் குடிமக்களுக்கு நிவாரணம் - ரணில் வெளியிட்டுள்ள அறிவித்தல்

இரத்து செய்யப்படும் கடன்கள்! நாட்டின் குடிமக்களுக்கு நிவாரணம் - ரணில் வெளியிட்டுள்ள அறிவித்தல்

 


பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டின் குடிமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2 ஏக்கருக்கும் குறைவான வயல்களை பயிரிட்ட நெற்செய்கையாளர்களின் கடன்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இது தொடர்பில் இன்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும், மே 13ஆம் திகதி தாம் பிரதமராகப் பதவியேற்ற போது, ​​நாளொன்றுக்கு 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு ஏற்பட்டதன் மூலம் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்தது. 

இரத்து செய்யப்படும் கடன்கள்! நாட்டின் குடிமக்களுக்கு நிவாரணம் - ரணில் வெளியிட்டுள்ள அறிவித்தல் | Proper Eastersunday Investigation Ranil

அதன் பின்னர் இரண்டு மாதங்களில் மின்வெட்டு 3 மணித்தியாலமாக குறைக்கப்பட்டு விவசாயிகளுக்கு உரம் வழங்கப்பட்டு நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகத்திற்கு கடினமான காலம்

ஜூலை மாதம் எரிபொருள் விநியோகத்திற்கு கடினமான காலமாக இருக்கும். எவ்வாறாயினும், டீசல் இருப்புக்கள் பாதுகாக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் ஜூலை 21 முதல் பெட்ரோல் விநியோகிக்கப்படும்.

இரத்து செய்யப்படும் கடன்கள்! நாட்டின் குடிமக்களுக்கு நிவாரணம் - ரணில் வெளியிட்டுள்ள அறிவித்தல் | Proper Eastersunday Investigation Ranil

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டின் குடிமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. 2 ஏக்கருக்கும் குறைவான வயல்களை பயிரிட்ட நெற்செய்கையாளர்களின் கடன்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், நாட்டிலும் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துரைத்த பதில் ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும், வெளிநாடுகளுடனான உதவிக்கான கலந்துரையாடல்களும் முன்னேறி வருவதாகவும் விளக்கமளித்தார்.

புலனாய்வு சேவை உதவி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முழுமையற்ற தன்மை காரணமாக இங்கிலாந்து அரசாங்கம் மற்றும் அவர்களின் புலனாய்வு சேவைகளின் உதவியை கோருவதாகவும் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இரத்து செய்யப்படும் கடன்கள்! நாட்டின் குடிமக்களுக்கு நிவாரணம் - ரணில் வெளியிட்டுள்ள அறிவித்தல் | Proper Eastersunday Investigation Ranil

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே காரணம். பொதுமக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 19வது திருத்தச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.

நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் சக்திகள் சமூகத்திற்குள் இருக்கின்றன. இந்த கூறுகள் நாட்டின் முன்னேற்றத்தை சீர்குலைப்பதில் இருந்து தடை செய்யப்படும். கௌரவ, நியாயமான கவலைகளைக் கொண்ட அமைதியான போராட்டக்காரர்கள் பிரசினைகளுக்கான தீர்வுகள் கண்டுபிடிக்கப்படும்.

நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தனிநபரின் கருத்து வேறுபாடுகளால் நாடு பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க வேண்டாம். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வகையில் அனைத்துக் கட்சி ஆட்சியை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |