Home » » சாணக்கியனுக்கு நாடாளுமன்றில் கடும் எச்சரிக்கை விடுத்த ரணில்!

சாணக்கியனுக்கு நாடாளுமன்றில் கடும் எச்சரிக்கை விடுத்த ரணில்!


நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் கடந்த மே 20 ஆம் திகதியன்று நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

20ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் உட்பட்ட நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தமை காரணமாகவே பலரின் வீடுகள் எரியூட்டப்பட்டதாக சாணக்கியன் வெளியிட்ட கருத்து ஏற்புடையதல்ல என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

சாணக்கியனுக்கு எச்சரிக்கை

சாணக்கியனுக்கு நாடாளுமன்றில் கடும் எச்சரிக்கை விடுத்த ரணில்!

இந்த கருத்தின் மூலம், சாணக்கியன், நடந்த வன்முறைகளை ஏற்றுக்கொள்கிறாரா? மரணத்தை ஏற்றுக்கொள்கிறாரா? என்று ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். சாணக்கியனின் கருத்தின்படி, 20வது திருத்தத்துக்கு ஆதரவளித்தமையே வீடுகள் எரியூட்டப்பட்டமைக்கு காரணமாக இருக்குமானால், குமார வெல்கமவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் அந்த கருத்து பொருந்தாது என்று ரணில் குறிப்பிட்டார்.

கோட்டாபய வீட்டுக்கு செல்லவேண்டும் என்று முதலில் கூறியவரே குமார வெல்கம என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் ரணில் குறிப்பிட்டார். எனவே அவர் ஏன் தாக்கப்பட்டார் என்று ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.

சாணக்கியனின் கருத்தை திரும்பப்பெற வேண்டும்

சாணக்கியனுக்கு நாடாளுமன்றில் கடும் எச்சரிக்கை விடுத்த ரணில்!

எனவே அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது சாணக்கியன் தமது கருத்து தொடர்பில் கவலை வெளியிட்டு தமது கருத்தை திரும்பப்பெற வேண்டும். இல்லையேல், குறித்த கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு சபாநாயகரிடம் கோரவேண்டியிருக்கும் என்றும் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்தார்.


இந்தநிலையில் குமார வெல்கமவின் மீது தாக்குதல் நடத்திய இடத்தில் உள்ள மக்கள், அவரை தாக்கவில்லை. வெளியில் இருந்து வந்தவர்களே அவரை தாக்கியுள்ளனர்.

எனவே இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, காலிமுகத்திடல் வன்முறை முதல் அன்று இடம்பெற்ற அனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தி சுயாதீனமான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொதுநலவாய நாடாளுமன்ற செயலாளரிடம் கோரியிருப்பதாககுறிப்பிட்டார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |