Advertisement

Responsive Advertisement

கிழக்கு மாகாணத்தில் அனைத்து அரச நிறுவனங்களிலும் வீட்டுத்தோட்டம் அமைக்க வேண்டும் - ஆளுநர் அனுராதா யஹம்பத் !!

 


கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து அரச நிறுவனங்களிலும் வீட்டுத்தோட்டம் அமைக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உத்தரவிட்டுள்ளார்.


மாகாண விவசாய அமைச்சின் தலையீட்டுடன் திட்டத்தை ஒருங்கிணைக்குமாறு விவசாய மாகாண அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் போதனாசிரியர்களுடனான விசேட சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

வரவிருக்கும் உணவு நெருக்கடியை எதிர்கொள்ள விவசாயிகளுக்கு அறிவூட்டல், சாகுபடி வேலைத்திட்டத்தை உருவாக்கவும் விவசாய பயிற்றுனர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

“எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை பற்றி பேசுகிறோம். அந்த சூழ்நிலையை சமாளிக்க, குறுகிய கால பயிர் சாகுபடியை விரைவில் தொடங்குவது அவசியம். இதை அனைவரும் தங்கள் பொறுப்பாக கருத வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டால், விவசாயிகளுக்கு வழிகாட்டத் தவறியதற்கு விவசாய ஆலோசகர்களே பொறுப்பேற்க வேண்டும்.

“அரசுக்கும் விவசாயிக்கும் இடையே உள்ள உறவை விவசாய ஆலோசகர்கள் புரிந்துகொண்டு, ஏற்படும் உணவு நெருக்கடியைச் சமாளிக்க உழைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments