Advertisement

Responsive Advertisement

பத்து மணி நேரங்களுக்கு அதிகமாக மின்வெட்டு சாத்தியம்!

 


அடுத்த சில நாட்களில் பத்து மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படக்கூடும் என மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனல் மின்நிலையங்களுக்குத் தேவையான டீசல் மற்றும் எரிபொருளின் அளவு குறைவடைந்துள்ளதாலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மின் பிறப்பாக்கி ஒன்று இன்னும் செயலிழந்து கிடப்பதுவுமே இதற்குக் காரணம்.

எரிபொருள் மற்றும் டீசல் உரிய நேரத்தில் அனுமதி கிடைக்காததாலும், எதிர்கால திட்டங்கள் இல்லாததாலும் நிலைமை மோசமாகியுள்ளது.

எனினும், வெசாக் போயாவை முன்னிட்டு 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் எவ்வித மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படாது என அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments