Advertisement

Responsive Advertisement

சமாதான கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா

 


( அஸ்ஹர்  ,இப்றாஹிம்)

சமாதான கற்கை நிறுவனம் ஒழுங்கு செய்திருந்த சமாதான கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா  கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த வியாளக்கிழமை பேராசிரியர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையில் இடம்பெற்றது.

நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த 40 பட்டதாரிகளுக்கு சமாதான கற்கை நெறிகளுக்கான பட்டம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் இந்தியாவைச் சேரந்த பேராசிரியை கலாநிதி நீதி பெண்டி , முன்னாள் கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் எம்.எஸ்.எம்.சுபைர் , சமாதான கற்கை நிறுவனத்தின் தவிசாளர் சமீர் யுனூஸ் , முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அலிசாக்கிர் மௌலானா , கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி வல்லிபுரம் கனகலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments