அரசாங்கத்திற்கு அதிகரிக்கும் நெருக்கடி காரணமாக கொழும்பிற்கு இராணுவத்தின் சிறப்புப்படையணி அழைக்கப்படும் என பிரித்தானியாவின் வேல்ஸில் இருக்கும் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட (கலாநிதி பிரபாகரன்) இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 53 ஆவது படையணியை கொழும்பிற்குள் அழைத்துக்கொள்வதற்கான போர்வாங்க ஏற்பாடுகள் நிறைவுப்பெற்றுள்ளதாகவும்,அவர்கள் தென்னிலங்கை நோக்கி வரும் புகைப்படங்கள்,காணொளிகளை மக்கள் வெளியிட வேண்டும் எனவும் சிங்கள ஊடகம் வெளியிட்ட செய்தி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட படையணியை கொழும்பிற்கு வரவழைப்பதானது தற்போதைய இராணுவம், இராணுவ உயர் மட்ட அதிகாரிகள் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments: