Home » » பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் , தே. பா களுவாஞ்சிக்குடியின் 103 வது ஆண்டு நிறைவு விழா

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் , தே. பா களுவாஞ்சிக்குடியின் 103 வது ஆண்டு நிறைவு விழா

 



( அஸ்ஹர் இப்றாஹிம்)

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடியின் 103 வது ஆண்டு நிறைவு விழா கடந்த ஏப்ரல் முதலாம் திகதி அனுஸ்டிக்கப்பட்டது.



பாடசாலை அதிபர் எம்.சபேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்  கணித பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்  சி.கிருஸ்ணபிள்ளை சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் த.ஜனேந்திரராஜா , உப அதிபர்களான வீ.ரவீந்திர மூர்த்தி , எம்.ரவிச்சந்திரன் , ஏ.கலாபராஜன் ,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் வ.கண்ணன் , பகுதித்தலைவர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , கல்விசாரா உத்தியோஸ்தர்கள் பங்கேற்றனர்.
இதன்போது 103 வருட நினைவாக கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |