Home » » ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா பதிலடி -எரிவாயு விநியோகம் நிறுத்தம்

ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா பதிலடி -எரிவாயு விநியோகம் நிறுத்தம்

 


உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை நடத்திய நிலையில் அந்த நாட்டின் மீது பல்வேறு தடைகளை அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டுள்ளன.

இதற்கு பதிலடி தரும் வகையில் ஐரோப்பாவுக்கு ரஷ்யாவும் எதிர்வினையாற்றி வருகிறது.

அந்த வகையில்,ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவின் மேற்குப் பகுதிக்கான எரிவாயு விநியோகம் வியாழக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் அரசுக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனம் ஐரோப்பாவின் எரிவாயு தேவையில் 40% க்கும் அதிகமாக பூர்த்தி செய்கிறது.

இந்த சூழ்நிலையில் ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய குறைந்த விலை எரிவாயுவிற்கு பதிலாக அதிக விலையில் மற்ற விநியேகதஸ்கர்களை தேட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |