எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் தினமும் 5 - 6 மணித்தியாலங்கள் வரை மின்சாரம் இல்லாமல் இருக்க வேண்டியுள்ளது.

டொலர் நெருக்கடியால் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் இந்த நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

சில நாட்களுக்கு முன்னர் தேவையான மசகு எண்ணெய் இன்மையால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும்  மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |