Advertisement

Responsive Advertisement

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு


கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையின் அனைத்து பல்கலைக்கழக நடவடிக்கைகளையும் முழுமையாக ஆரம்பிப்பதற்கான திகதியினை உறுதியாக அறிவிக்க முடியாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது பல்கலைக்கழக செயற்பாடுகள்  50 வீதம் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்டபேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாத்திரம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந் நிலையில், அனைத்து பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளையும் உடனடியாக முழுமையாக ஆரம்பிப்பது நடைமுறை சாத்தியமற்றது எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments