Home » » பாடசாலை நடவடிக்கைகள் ஏழாம் திகதி ஆரம்பம்- பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறைகள்.

பாடசாலை நடவடிக்கைகள் ஏழாம் திகதி ஆரம்பம்- பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறைகள்.

 


இலங்கையில் பாடசாலைகள் நாளை மறுதினம் (7) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் கூடிய புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் குழுக்களாக பாடசாலைக்கு அழைக்கப்படவுள்ளனர்.

20 மாணவர்களைக் கொண்ட வகுப்புகள் தினமும் நடாத்தப்பட வேண்டும் என்றும், 21 தொடக்கம் 40 வரையில் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட வகுப்புகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு வாரங்களில் தனித்தனியாக நடாத்தப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், 40 இற்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட வகுப்புகளை மூன்று சம பிரிவுகளாகப் பிரித்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் பொருந்தும்.

மேலும் பாடசாலைக்கு அழைக்கப்படாத மாணவர் குழுக்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள், மாற்று வழிமுறைகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு, அவர்களுக்கான பாடத்திட்டமும் பூரணப்படுத்தப்பட வேண்டுமென கல்வியமைச்சின் செயலாளரினால் மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைவரத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |