Home » » தென்னிலங்கையில் மாபெரும் சத்தியாகிர போராட்டம்- விடுக்கப்பட்டது பகிரங்க அழைப்பு!

தென்னிலங்கையில் மாபெரும் சத்தியாகிர போராட்டம்- விடுக்கப்பட்டது பகிரங்க அழைப்பு!


ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் கொழும்பு ஹைட் பார்கில் இன்று மாலை 3 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை பாதாளத்தில் இருந்து மீட்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இந்த சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்படுவதாக கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“நாட்டை மீட்டெடுப்போம்“ எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள இந்த போராட்டத்தில் கட்சி பேதமின்றி வெள்ளை ஆடை அணிந்து கலந்துகொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம்,

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண தேசிய கொள்கையொன்றை உருவாக்குமாறு கோரியே இந்த சத்தியாகிரகப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |