( றம்ஸீன் முஹம்மட்)
முன்னாள் அமைச்சர், கலாநிதி அல்ஹாஜ் மர்ஹூம் ஏ. ஆர். மன்சூர் அவர்களின் நினைவாக அன்னாரின் அன்பு புதல்வியும் ஏ ஆர். மன்சூர் பவுண்டேஷன் ஸ்தாபகருமான சட்டத்தரணி மர்யம்_நளீமுதீன் (அவுஸ்திரேலிய முஸ்லிம் கவுன்சிலின் செயலாளர்) அவர்களினால் கல்முனை பிரதேசத்தின் நலன்கருதி தனது சொந்த நிதியில் வருடா வருடம் முன்னெடுக்கப்பட்டு வரும்" முக்கிய தேவையுடைய மாணவர்களுக்களின் கல்வியாண்டுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டமானது அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை ,சாய்ந்தமருது, மருதமுனை, இஸ்லாமபாத், நட்பிட்டிமுனை ,மாளிகைக்காடு மற்றும் மத்திய முகாம் போன்ற பிரதேசங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற விபரங்களைக் கொண்டு 500க்கும் மேற்பட்ட முக்கிய தேவையுடைய மாணவர்களுக்கு மேற்படி உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டது.
0 Comments