உக்ரைனில் ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் கிடங்கு பெரும் தீப்பிழம்புகளுடன் பற்றி எரியும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
உக்ரைனின் தலைநகர் கிவ் பிராந்தியத்தில் உள்ள வாசில்கிவ் நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு ஒன்றே ரஷ்ய படைகளின் எறிகனை தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில மணி நேரத்துக்கு முன்னர் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தை நகரின் முதல்வர் நடாலியா பாலசினோவிச் மற்றும் அரசாங்க ஆலோசகர் என்டன் ஜெராசென்கோ ஆகியோர் உறுதிப்படுத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
0 Comments