( தாரிக் ஹஸன்)
திருகோணமலை கொழும்பு பிரதான வீதியில் கலேவெலவில் தனியார் அதிசொகுசு பஸ்சொன்று லொரியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் கலேவெலவில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்த்து.
கொழும்பிலிருந்து திருகோணமலையை நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ்சொன்றே இவ்வாறு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
இவ்விபத்துச் சம்பவம் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் கலேவெலவில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்த்து.
கொழும்பிலிருந்து திருகோணமலையை நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ்சொன்றே இவ்வாறு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
0 Comments