Advertisement

Responsive Advertisement

1.64 கிலோ கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது!

 


1.64 கிலோ கிராம் ஹெரோயினுடன் களுபோவில பகுதியில் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் களுபோவில பகுதியில் வசிக்கும் 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆரம்ப கட்ட விசாரணைகளில் குறித்த பெண்ணும் அவரது கணவரும் 
மற்றுமொரு கடத்தல்காரருக்கு போதைப்பொருளை விநியோகித்தது தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை இன்று கல்கிசை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments