Home » » பிரித்தானிய ‘எடின்பரோ கோமகன் சர்வதேச விருது வழங்கல் விழாவில் அம்பாறை மாவட்டத்தில் ஜீனியஸ்7 விருதுப்பிரிவுடாக மூன்று பேருக்கு வெண்கல விருதுக்கு தெரிவு

பிரித்தானிய ‘எடின்பரோ கோமகன் சர்வதேச விருது வழங்கல் விழாவில் அம்பாறை மாவட்டத்தில் ஜீனியஸ்7 விருதுப்பிரிவுடாக மூன்று பேருக்கு வெண்கல விருதுக்கு தெரிவு



தாரிக் ஹஸன்)

பிரித்தானிய எடின்பரோ கோமகன் சர்வதேச விருது வழங்கல் விழா விருதுக்கு (The Duke of Edinburgh’s International Award) இவ்வருடம் அம்பாறை மாவட்டத்தில் ஜீனியஸ் 7 விருதுப்பிரிவுடாக 03 இளைஞர் யுவதிகள் வெண்கல விருதுக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கான இவ் சர்வதேச விருது வழங்கும் விழா இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அவர்களின் வழிகாட்டலில் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் பணிப்பாளர் நாயகம் தமித்த விக்கரமசிங்க தலைமையில் முக்கியஸ்தர்கள் பலரின் பங்கேற்ப்புடன் இன்று மணிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் டங்கன் ஒயிட் கேட்போர் கூடத்தில்” நடைபெற்றது.

இவ்விருதானது 13-24 வயது உட்பட்ட இளைஞர் யுவதிகளின் ஆளுமை,நுண்ணறிவுவெளிக்கள ஆய்வுதலைமைத்துவம்ஆற்றல்கல்விதிறமைவிளையாட்டு ,சர்வதேச தொடர்புகளுடைய இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்படுகின்ற ஓர் சர்வதேச விருதாகும்.

இதேவேளை அம்பாறை மாவட்ட முன்னால் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும்யூத் அலியன்ஸ் ஶ்ரீ-லங்கா இளைஞர் அமைப்பின் (Youth Alliance Sri Lanka) அமைப்பின் ஸ்தாபக தலைவரும் மற்றும் ஜீனியஸ்7 விருதுப் பிரிவின் (Genius7 Award Unit) தலைவருமான ஸமான் .எம் ஸாஜீத் அவர்கள் இவ் விருதினை பெறவுள்ள அம்பாரை மாவட்ட இளைஞர் யுவதிகளை நெறிப்படுத்தி ஊக்கப்படுத்தி வழிகாட்டலை மேற்கொண்டிருந்தார்.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இளைஞர் வேலைத்திட்டங்களில் மேற்கொள்வதுடன் தலைமைத்துவம்,இளைஞர் சார் நல

வேலைத்திட்டம்,முயற்சியாண்மை அபிவிருத்தி,சமூகவிழிப்புணர்வூட்டல் போன்ற இவ்வாறான பல நிகழ்சியில் கலந்து கொண்டவருமார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |