Home » » மட்/சிவாநந்த வி.தே.பா ஆசிரியர் மீது தாக்குதல் நடாத்தியவர்களை கைது செய்யாவிட்டால் பாடசாலைகளை முடக்கி போராட்டம் தொடரும் இ.ஆ.சங்கம் எச்சரிக்கை!!!

மட்/சிவாநந்த வி.தே.பா ஆசிரியர் மீது தாக்குதல் நடாத்தியவர்களை கைது செய்யாவிட்டால் பாடசாலைகளை முடக்கி போராட்டம் தொடரும் இ.ஆ.சங்கம் எச்சரிக்கை!!!

 



மட்டக்களப்பு சிவாநந்தா தே.பா. க்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியர் மீது தாக்குதல் நடாத்தியவர்களை கைது செய்யாவிட்டால் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை முடக்கி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.

இ.ஆ.ச ஏற்பாட்டில் இன்று பி.ப. கல்லடி உப்போடை சிவாநந்தா தே.பா. முன்பாக மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் இலங்கை அசிரியர் சங்கம்,  இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கம்,  இ.ஆ.சே. சங்கங்கங்களின் ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த 6ம் திகதி சிவாநந்த தே.பா மூடி ஆசிரியர்கள், மாணவர்கள் உள் நுழைவது தடுக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது யாவரும் அறிந்த விடயமாகும். இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொ.உதயரூபன் குறித்த பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யுமாறு கோரியே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.





























இதன் போது ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதுடன் ஆசிரியர்கள் அச்சுறுத்தப்பட்டதாகத் தெரிவித்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் ஆசிரியர்கள் சுகவீனப் போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையிலே இன்று (10.12.2021) பி.ப. 1.50 மணியளவில் பாடசாலைக்கு முன்பாக ஒன்று திரண்ட ஆசிரியர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசியல்வாதிகளின் குண்டர்களை கைது செய், ஆசிரியர்களை அதிகார அரசியல் கொண்டு அடக்காதே, குண்டர்களை வைத்து மாணவர்களின் கல்வியை சீரழிக்காதே, அரசியல் கைக்கூலி சிவாநந்தா அதிபரே உடன் வெளியேறு, வங்குரோத்து அரசியலைக் கல்விக்குள் புகுத்தாதே, போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும்ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் ஏந்தியிருந்தனர். 

இந்த ஆர்ப்பாட்டமானது இ.ஆ.சங்கத்தின் உப தலைவர் H.M.சமீன் உட்பட பெருமளவான ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பாடசாலையை அண்மித்த பகுதியில் கண்டனப் பேரணியும் நடாத்தப்பட்டது. 

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட குண்டர்ளை கைது செய்ய காத்தான்குடி பொலிசார் நடவெடிக்கை எடுக்காவிட்டால் இலங்கை பூராகவும் பாடசாலைகளின் கல்வி நடவெடிக்கைகளை முடக்கி போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என இங்கு எச்சரிக்கப்பட்டது. சிவாந்த தே.பா பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு நீதி கிடைக்கும் வரையில் இப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என இதன் போது எச்சரிக்கப்பட்டது.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |